உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ரூ.2000 பொங்கல் பரிசு கேட்ட பாஜ: நீதிபதிகள் அதிரடி | pongal gift | pongal parisu 2025 | BJP vs DMK

ரூ.2000 பொங்கல் பரிசு கேட்ட பாஜ: நீதிபதிகள் அதிரடி | pongal gift | pongal parisu 2025 | BJP vs DMK

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. நிதி நெருக்கடி காரணமாக இந்த முறை ரொக்க பணம் வழங்க முடியாது என்று அரசு கைவிரித்தது. பணமும் வழங்க வேண்டும் என்று பாஜ, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதற்கிடையே பொங்கல் தொகுப்புடன் 2 ஆயிரம் ரூபாய் வழங்க அரசுக்கு உத்தரவிடக்கோரி பாஜ சார்பில் வக்கீல் மோகன்தாஸ் பொதுநல வழக்கு தொடுத்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது: 2009ம் ஆண்டு முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. 2016ல் பழனிசாமி முதல்வராக இருந்த போது பொங்கல் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்கினார். கோவிட் காலத்தில் பொங்கல் பரிசுடன் 2500 ரூபாய் வழங்கப்பட்டது. 2021ல் ஆட்சிக்கு வந்த பிறகு ரொக்கப்பணம் இன்றி பொங்கல் தொகுப்பு மட்டுமே திமுக அரசு கொடுத்தது. கடந்த ஆண்டு லோக் சபா தேர்தல் வந்ததை கருத்தில் கொண்டு, பரிசு தொகுப்புடன் 1000 ரூபாய் வழங்கியது. ஆனால் இந்த ஆண்டு பொங்கல் தொகுப்பில் பச்சரிசி, சர்க்கரை, கரும்பு மட்டுமே இடம்பிடித்துள்ளது. ரொக்கப்பணம் இல்லை. புயல், மழை, வெள்ளத்தால் மக்களும் விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பொங்கல் கொண்டாட உதவியாக கார்டுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் சேர்த்து வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரி இருந்தார். டிசம்பர் 28ம் தேதி பொங்கல் பரிசு தொகை அறிவிப்பை அரசு வெளியிட்ட நிலையில், டிசம்பர் 30ல் இந்த வழக்கை தொடுத்திருந்தார். இன்று தலைமை நீதிபதி ஸ்ரீராம், நீதிபதி செந்தில்குமார் ராம்மூர்த்தி அமர்வு முன்பு மனுதாரர் சார்பில் வக்கீல் ஜிஎஸ் மணி ஆஜரானார்.

ஜன 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ