முறையாக சொத்து வரி செலுத்துவோருக்கு சலுகை | Property Tax | TN Govt
சொத்து வரி செலுத்தினால் 5 சதவீத ஊக்கத்தொகை! அக்.30 கடைசி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், சொத்து வரி பிரதான வரி வருவாயாக உள்ளது. சென்னை மாநகராட்சியில் ஆண்டுக்கு 1,800 கோடி ரூபாய் சொத்து வரி வசூலிக்கப்படுகிறது. இதுவே, இதர மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில், 100 முதல் 1,000 கோடி ரூபாய் வரை உள்ளது. இரண்டு அரையாண்டுகளில் சொத்து வரி வசூலிக்கப்படுகிறது. முதல் அரையாண்டு ஏப்ரல்1 முதல் செப்டம்பர் 30 வரை. 2ம் அரையாண்டு அக்டோபர் 1 முதல் மார்ச் 31 வரை. தமிழகத்தில் வரும் 2025- 26ம் நிதியாண்டு முதல், 6 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்பட உள்ளது. முறைப்படி சொத்து வரி செலுத்துவோருக்கு, அரசு சலுகை வழங்குவதாக நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகள் கூறினர். தற்போது 2ம் அரையாண்டுக்கான சொத்து வரியை, வரும் 30க்குள் செலுத்தினால், 5 சதவீதம் அல்லது 5,000 ரூபாய் வரை ஊக்கத்தொகை கிடைக்கும். அவ்வாறு செலுத்தாதவர்களுக்கு, 1 சதவீதம் தனி வட்டி என்ற அடிப்படையில், தண்ட வரி வசூலிக்கப்படும். நகர்ப்புற உள்ளாட்சிகளில் வசிப்போர், வரும் 30க்குள் சொத்து வரி செலுத்தி பயனடையலாம்.