மேகதாது அணை கட்டுவோம்; கன்னட அமைப்புகள் முழக்கம்
பெங்களூருவில் இருந்து பெம்மசந்திரா வரை அமைக்கப்படும் மெட்ரே ரயில் பாதையை, அத்திப்பள்ளி வழியாக தமிழகத்தின் ஒசூர் வரை 23 கிலோ மீட்டருக்கு நீட்டிக்க கர்நாடக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக - கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் கன்னட அமைப்பினர் சாலை மறியல் செய்தனர். கன்னட சலுவளி கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் கன்னட ஜாக்ருதி வேதிகே, கன்னட கடிநாடு வேதிகே அமைப்பினர் பங்கேற்றனர். கர்நாடாவில் இருந்து தமிழகம் சென்ற வாகங்களை மறித்து முழக்கமிட்டனர்.
ஆக 31, 2024