/ தினமலர் டிவி
/ பொது
/ புதுச்சேரியில் சம்பவம் அமைச்சர் சொன்ன விளக்கம் Police attacked by accussed in Puducherry
புதுச்சேரியில் சம்பவம் அமைச்சர் சொன்ன விளக்கம் Police attacked by accussed in Puducherry
புதுச்சேரி ஊசுடு பகுதியை சேர்ந்த சகோதரர்கள் சதீஷ், பிரதீப் கஞ்சா விற்பனை செய்து வந்தனர். வியாபாரத்தில் ஏற்பட்ட மனக் கசப்பால், ஒருவருக்கொருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். இருவரையும் நீண்ட நாளாக போலீஸ் தேடி வந்த நிலையில், மும்முரமாக சண்டையிட்டுக் கொண்டிருந்த சகோதரர்களை, போலீஸ் ஏட்டு வசந்த் கையும் களவுமாக பிடிக்க முயன்றார். போலீஸ் பிடியில் இருந்து தப்புவதற்காக, வீட்டில் இருந்த குக்கரை எடுத்து வந்து ஏட்டு வசந்த்தின் தலை மற்றும் முகத்தில் இருவரும் பலமாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர்.
ஆக 07, 2024