உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கழிவு நீரில் சிக்கிய 50,000 மக்கள்: சென்னையில் அதிர்ச்சி சம்பவம் | Puliyanthoppu sewage | Chennai

கழிவு நீரில் சிக்கிய 50,000 மக்கள்: சென்னையில் அதிர்ச்சி சம்பவம் | Puliyanthoppu sewage | Chennai

இந்த வருஷம் தீபாவளி இல்ல சாக்கடையில் வாழும் மக்கள் அதிர வைக்கும் காட்சி சென்னை புளியந்தோப்பு, பட்டாளம், ஓட்டேரி பகுதி கழிவுநீரை சுத்திகரித்து அனுப்ப பெரம்பூர் பேரக்ஸ் ரோட்டில் கழிவுநீர் அகற்றும் பம்பிங் ஸ்டேஷன் செயல்படுகிறது. இங்கே அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு பழுதுதாவதால் குடியிருப்பு பகுதிகளுக்குள் கழிவுநீர் புகுந்து விடுகிறது. புளியந்தோப்பு, பட்டாளம், கே.எம் கார்டன் பகுதிகளில் கடந்த 5 நாட்களுக்கு மேலாக கழிவு நீர் தேங்கி உள்ளது. பொதுவாக சென்னையில் மழை பெய்தால் தான் ரோட்டில் தண்ணீர் தேங்கும். ஆனால் இங்கே மழை பெய்யாமலேயே தெருக்களில் 3 அடி உயரத்துக்கு கழிவு நீர் மட்டுமே தேங்கி இருக்கிறது. வீட்டு கதவை திறந்தால் நாற்றம் தாங்க முடியவில்லை. அத்தியாவசிய பொருட்கள் வாங்க கூட வெளியே செல்ல முடியவில்லை. கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அக் 19, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

N Sasikumar Yadhav
அக் 19, 2025 22:40

திருவாளர்கள் சென்னை மாக்கள் திமுகமீது தனிப்பாசம் கொண்டவர்கள் அதனால்தான் திமுக அவர்களால் முடிந்தளவு சென்னை மாக்களுக்கு துரோகம் செய்தாலும் ஓஷியும் இலவசமும் ஒருசில பொய் வாக்குறுதி என தெரிந்தும் பாசத்துடன் வாக்களித்து ஆட்சியில் அமர்த்துகிறார்கள் வாழ்க வாழ்க சென்னை மாக்களின் தியாகம்


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை