/ தினமலர் டிவி
/ பொது
/ சாலையை சீர் செய்யாத அதிகாரிகள் மீது மக்கள் கோபம்! Rain at Chennai | Thiruverkadu Rain | Flood
சாலையை சீர் செய்யாத அதிகாரிகள் மீது மக்கள் கோபம்! Rain at Chennai | Thiruverkadu Rain | Flood
சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. பல இடங்களில் சாலையில் மழை நீர் தேங்கியதால் மக்கள் அவதி அடைந்தனர். சில பகுதிகளில் வாகன போக்குவரத்து முடங்கியது. திருவேற்காடு நூம்பல் சாலையில் மழை நீர் தேங்கியதால், வாகனங்கள் தத்தளித்தபடி சென்றன. குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க பல நாட்களாக கோரிக்கை விடுத்தும், அதிகாரிகள் அதை கண்டுகொள்ளவில்லை என மக்கள் புகார் கூறுகின்றனர். காட்டுப்பாக்கம், கோபுரசநல்லூர், ஐயப்பன்தாங்கல் பகுதி மக்களும் இந்த சாலையை பயன்படுத்துவதால், அவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆக 05, 2024