/ தினமலர் டிவி
/ பொது
/ நிலச்சரிவில் இடிந்தது பாலம்; மாயமான 8 பேரை தேடும் குழு Rain| landslide| kills 17| Indonesia|
நிலச்சரிவில் இடிந்தது பாலம்; மாயமான 8 பேரை தேடும் குழு Rain| landslide| kills 17| Indonesia|
இந்தோனேசிய நாட்டின் முக்கிய தீவான ஜாவாவில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்கிறது. பெக்கலோங்கன் நகருக்கு அருகில் உள்ள மலைப் பகுதியில் நேற்று மதியம் திடீர் நில சரிவு ஏற்பட்டது. இதில் 17 பேர் மண்ணில் புதைந்தனர். அவர்களின் சடலங்களை தேசிய பேரிடர் மீட்பு குழு மீட்டனர். இன்னும் 8 பேரை காணவில்லை. கன மழை பெய்ததால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டது. 2 வீடுகள், வாகனங்களும் மண்ணுக்குள் புதைந்தன. ஒரு பாலமும் இடிந்து விழுந்தது.
ஜன 21, 2025