உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் நடந்த சம்பவம் | Rajiv gandhi | sriperumbudur

காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் நடந்த சம்பவம் | Rajiv gandhi | sriperumbudur

காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூரில் 1991 மே 21ல் முன்னாள் பிரதமர் ராஜீவ் மனிதவெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார். பணியில் இருந்த டிஎஸ்பி உட்பட 9 காவலர்கள் உட்பட 15 பேர் இறந்தனர். இந்த நாள், தேசிய பயங்கரவாத எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த தினத்தையொட்டி, காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் நடந்தது. போலீசார் துப்பாக்கியால் வானத்தை நோக்கி 3 ரவுண்டுகள் சுட்டு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. அவர்களுக்கு உத்தரவிட்டு கொண்டு இருந்த எஸ்ஐ தெய்வசிகாமணிக்கு பின் நின்று இருந்த காவலர், துப்பாக்கியை சாய்த்து வைத்து தயார்படுத்தும்போது தவறுதலாக அது வெடித்தது. அதிர்ஷ்டவசமாக எஸ்ஐ உயிர்தப்பினார்.

மே 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை