கிரிக்கெட் வெற்றியில் அரசியல் ஆதாயம் பெற முயன்ற சித்தராமையா RCB Tragedy| Chinnaswamy Stadium
18வது பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் RCB அணி கோப்பை வென்றதையடுத்து, பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் வெற்றிக் கொண்டாட்டம் நடந்தது. நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கானோர் திரண்டதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 11 பேர் இறந்தனர். இந்த விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் அரசு பாதுகாப்பு ஏற்பாடுகளை முறையாக செய்யவில்லை என, எதிர்க்கட்சிகள், சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த விவகாரத்தில் விளக்கம் அளிக்கக் கோரி, கர்நாடக ஐகோர்ட்டும் மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்த நிலையில் கூட்ட நெரிசல், பாதுகாப்பு குறைபாடு, செய்திருக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பேரிடர் மேலாண்மை நிபுணர் பிரபு காந்தி விளக்கம் அளித்துள்ளார்.