/ தினமலர் டிவி
/ பொது
/ செம்மர கடத்தலை விட்டு விடுங்கள்; தமிழர்களுக்கும் பவன் கல்யாண் வார்னிங் Redwood smuggling| andhrapra
செம்மர கடத்தலை விட்டு விடுங்கள்; தமிழர்களுக்கும் பவன் கல்யாண் வார்னிங் Redwood smuggling| andhrapra
ஆந்திராவின் துணை முதல்வர் பவன் கல்யாண், திருப்பதிக்கு சென்றார். மாமண்டூர் வனப்பகுதியில், கடத்தல்காரர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான செம்மரக்கட்டைகள் வைக்கப்பட்டுள்ள கிடங்குக்கு சென்று பார்வையிட்டார். மங்களம் பகுதியில் உள்ள செம்மர கிடங்கையும் பார்த்தார். பின், 5 மாவட்ட கலெக்டர்கள், எஸ்பிக்கள், வனத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். செம்மரம் கடத்தலை தடுப்பதற்கான நடவடிக்கை; பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளை விற்று அரசுக்கு வருவாய் ஈட்டுவது பற்றி அவர்கள் ஆலோசித்தனர்.
நவ 08, 2025