விதிகளை மீறியவர்களுக்கு இரக்கம் காட்டக்கூடாது: ஐகோர்ட் | Regulation of building | Violate rules | Hi
சென்னை தி.நகர், பாண்டிபஜாரில் அனுமதியை மீறி 10 தளங்கள் வரை கட்டிய கட்டடத்தை வரன்முறை செய்யக் கோரி, தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்று சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமமான சிஎம்டிஏவிடம் விண்ணப்பித்தது. விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதை அடுத்து, அரசிடம் மேல்முறையீடு செய்தது. அதுவும் தள்ளுபடி ஆனதால், கட்டடத்துக்கு சீல் வைத்த சிஎம்டிஏ, கட்டடத்தை இடிப்பது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பியது. அதை எதிர்த்து கட்டுமான நிறுவனம் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், கட்டடத்தை வரன்முறை செய்ய மறுத்து, சிஎம்டிஏவும், தமிழக அரசும் பிறப்பித்த உத்தரவுகளை எதிர்த்து வழக்கு தொடராத கட்டுமான நிறுவனம், கட்டுமானத்தை இடிக்க எடுத்த நடவடிக்கையை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்துள்ளதாக கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டுமானங்களை வரன்முறை செய்ய வேண்டும் என உரிமையாக கோர முடியாது. வரன்முறை சலுகையை வழக்கமான நடைமுறையாக அரசு மேற்கொள்ளக் கூடாது.