உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / போராட்டத்தை ஒடுக்க வந்த போலீஸ் படை | Removal of encroachment | People protest | Police clash | Madur

போராட்டத்தை ஒடுக்க வந்த போலீஸ் படை | Removal of encroachment | People protest | Police clash | Madur

மதுரை புதூர் மூன்றுமாவடி பகுதியில் சாலையை ஆக்கிரமித்திருந்த கடைகள், வீடுகள் மற்றும் கோயிலை அகற்ற பொதுப்பணி அதிகாரிகள் ஜேசிபியுடன் வந்தனர். கட்டடங்களை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள், இந்து முன்னணி அமைப்பினர் 50க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அமைச்சர் மூர்த்தி மற்றும் தமிழக அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். போராட்டம் காரணமாக போலீஸ் துணை கமிஷனர் மதுகுமாரி தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். போராட்டத்தை கைவிடுமாறு அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஜூலை 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !