விருத்தாச்சலம் அருகே நடந்த திக் திக் சம்பவம் | River | Water Flow
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே வேப்பூர் வழியாக மணிமுத்தாறு பாய்கிறது. இங்கு மாசி மகத்தை முன்னிட்டு பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வந்திருந்தனர். அப்போது திடீரென ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆற்றின் நடுவே சிக்கிய குழந்தைகள், முதியவர்கள் கரைக்கு வர சிரமப்பட்டனர். அங்கே பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் சாதுர்த்தியமாக செயல்பட்டு பொதுமக்களை மீட்டனர். காவலர் தென் எழிலவன் ஆற்றில் வெள்ளம் அதிகரிக்கும் முன்பே குழந்தைகள், பெரியவர்கள், பெண்களை எச்சரித்து கரைக்கு அழைத்து வந்தார்.
மார் 12, 2025