உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காரை நிறுத்தாமல் டிரைவர் ஓட்டிச் சென்றது ஏன்? | Road accident 2 devotees dead | car accident

காரை நிறுத்தாமல் டிரைவர் ஓட்டிச் சென்றது ஏன்? | Road accident 2 devotees dead | car accident

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள பழைய கன்னிவாடி கரிசல்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் புவனேஸ்வரன் (21). இவரது அத்தை மகளுக்கு நேற்றிரவு பிரசவ வலி ஏற்பட்டது. ஒட்டன்சத்திரம் மருத்துவமனையில் சேர்ப்பதற்காக அதிகாலை 5 மணிக்கு காரில் கிளம்பினர். புவனேஸ்வரன் காரை ஓட்டினார். ஒட்டன்சத்திரம் சாலைப்புதூர் அருகே எட்டுக்கை காளியம்மன் கோவில் அருகே சென்றபோது, பழனிக்கு பாத யாத்திரை செல்லும் பக்தர்கள் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தனர். வேகமாக வந்த கார் 3 பக்தர்கள் மீது மோதியது. மூவரும் தூக்கி வீசப்பட்டனர். கார் நிற்காமல் சென்று விட்டது. கார் மோதியதில் மதுரை மீனாட்சிபுரத்தைச் கேசவன் (17), அடைக்கல ராஜா ( 27) ஆகியோர் ஸ்பாட்டிலேயே இறந்தனர். கேசவனின் தந்தை அழகர் (45) படுகாயமடைந்தார். அவரை ஆம்புலன்சில் ஒட்டன்சத்திரம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அழகருக்கு ஐசியுவில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இறந்த சிறுவன் கேசவன் மாற்றுத்திறனாளி ஆவார்.

ஜன 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ