/ தினமலர் டிவி
/ பொது
/ ஆட்டோ டிரைவரை கடித்து குதறிய 4 ராட்வீலர் நாய்கள்: சென்னையில் பரபரப்பு | Rottweiler dogs attack
ஆட்டோ டிரைவரை கடித்து குதறிய 4 ராட்வீலர் நாய்கள்: சென்னையில் பரபரப்பு | Rottweiler dogs attack
இன்று வழக்கம் போல் சவாரி ஏற்றுவதற்காக மூலக்கொத்தளம் பிபி கோயில் அருகில் நின்றிருந்தார். அப்போது அதே பகுதியில் உள்ள பள்ளியில் இருந்து குழந்தைகளை பெற்றோர்கள் வீட்டிற்கு அழைத்து சென்று கொண்டிருந்தனர். அவ்வழியாக மகி என்பவர் 4 ராட்வீலர் நாய்களை அழைத்து வந்தார் . அந்த நாய்கள் பள்ளியில் இருந்து வெளியில் வந்த மாணவர்களை கடிக்க சென்றன. இதைப் பார்த்த ஆட்டோ டிரைவர் முத்து நாய்களை விரட்ட முயன்றார்.. உடனே 4 நாய்களும் சேர்ந்து முத்துவை கடித்தன. அருகில் இருந்தவர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.
ஜூன் 03, 2025