டூரிஸ்ட்டாக வந்த ரஷ்யர் சிவனடியாரானது எப்படி? | Russian | Temple | Lord Shiva
ஷ்யா நாட்டை சேர்ந்தவர் சேர்ந்தவர் அலெக்ஸி. சுற்றுலா பயணியாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்தியா வந்துள்ளார். தமிழகத்தில் பல கோயில்களுக்கு சென்று வழிபட்டார். அதில் சிவ தலங்களுக்கு அதிகமாக சென்றுள்ளார். ஒரு கட்டத்தில் ஆன்மீக நாட்டம் அதிகரித்து சிவனடியாராகவே மாறிவிட்டார் அலெக்ஸி. தொடர்ந்து ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த ஜோதிடர் கோபிநாத் என்பவரின் அறிமுகம் கிடைத்துள்ளது. அவரது வழிகாட்டுதலின் கீழ் அலெக்ஸி தமிழகம் முழுக்க பயணித்து கோயில்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இப்போது ரஷ்யா மற்றும் கஜகஸ்தான் நாட்டை சேர்ந்த தனது நண்பர்களான அலினா, ஆர்டியோட், திமு, ஆனா ஆகியோருடன் சேர்ந்து 20 நாள் ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழகம் வந்துள்ள அலெக்ஸியின் நண்பவர்கள் நான்கு பேரும் சிவனடியாராக மாறி விட்டனர். அவர்கள் தங்கள் பெயரை மித்ராநந்த தேவ், அருணிமாதேவி, தேஜாநந்தி, சிவானந்தா என ஆன்மீக பெயர்களாக மாற்றிக்கொண்டனர். 20 நாள் பயணத்தில் ராமேஸ்வரம், நவகிரக ஸ்தலங்கள், பழனி, திருநள்ளாறு சனீஸ்வரன் கோயில் என பல்வேறு சிவ தலங்களுக்கும், முருகன் கோயில்களுக்கும் சென்றுள்ளனர். புதனன்று கரூர் வந்த ஐந்து பேரும் கரூர் வெண்ணைமலையில் அமைந்துள்ள பாதரசலிங்கத்தை தரிசித்தனர். அங்கு வழிபாடு நடத்திய அவர்கள் பாதரலிச லிங்கம் அமைந்துள்ள தியான மண்டபத்தில் சிவ ஸ்தோத்திரம் கூறி தியானம் செய்தனர்.