/ தினமலர் டிவி
/ பொது
/ ஐயப்ப பக்தர்களுக்கு கேரளா அதிகாரிகள் கெடுபிடி sabari malai| ayyappan devotees
ஐயப்ப பக்தர்களுக்கு கேரளா அதிகாரிகள் கெடுபிடி sabari malai| ayyappan devotees
சபரி மலை ஐயப்பன் கோயிலுக்கு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் கார், வேன், பஸ்களில் சென்று வருகின்றனர். சில பக்தர்களின் வாகனங்கள், பல்வேறு கோயில்களின் வடிவமைப்புகளில் அலங்காரம் செய்யப்பட்டு எடுத்து வரப்படுகின்றன. அத்துடன் வாழைக்குலைகள், இளநீர் குலைகளையும் வாகனங்களில் கட்டி அழகுபடுத்தி வருகின்றனர். சபரிமலையில் பல வளைவுகள் கொண்ட சாலைகள் உள்ளன. அதன் பக்கவாட்டுகளில் ஆபத்தான பள்ளங்களும் இருக்கின்றன. அலங்காரங்களுடன் வரும் வாகனங்கள் எதிரே வரும் வாகன டிரைவர்களின் கவனங்களை திசை திருப்பி விபத்துகளை ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகம்.
டிச 23, 2024