/ தினமலர் டிவி
/ பொது
/ மண்டல, மகர விளக்கு பூஜை ஏற்பாடுகள் விறுவிறு | Sabarimala pilgrims | insurance coverage | TDB
மண்டல, மகர விளக்கு பூஜை ஏற்பாடுகள் விறுவிறு | Sabarimala pilgrims | insurance coverage | TDB
சபரிமலையில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை டிசம்பர் 26லும், மகர விளக்கு பூஜை ஜனவரி 14ன்கும் நடக்க உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை திருவிதாங்கூர் தேவசம்போர்டு மற்றும் கேரள அரசு செய்து வருகிறது. சீசன் காலங்களில் வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சிரமமின்றி வந்து செல்ல அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. இந்த சூழலில் சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு 5 லட்சம் காப்பீடு வழங்கும் திட்டத்தை கேரள அரசு அறிவித்துள்ளது. தரிசனத்துக்காக வந்த இடத்தில் மரணமடையும் பக்தர்களின் குடும்பத்திற்கு தேவசம்போர்டில் இருந்து இத்தொகை வழங்கப்படும்.
நவ 02, 2024