/ தினமலர் டிவி
/ பொது
/ சபரிமலை ஐயப்பன் கோயிலில் 3 நாட்களாக அதிகரித்த கூட்டம் | Sabarimala Iyappan temple | Devotees crowd
சபரிமலை ஐயப்பன் கோயிலில் 3 நாட்களாக அதிகரித்த கூட்டம் | Sabarimala Iyappan temple | Devotees crowd
சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை 1 முதல் 41 நாட்கள் மண்டல பூஜை காலம் அனுசரிக்கப்படுகிறது. 41வது நாள் மண்டல பூஜை நடக்கிறது. இந்த ஆண்டு மண்டல பூஜை நவம்பர் 16ல் தொடங்கியது. அதற்கு முதல் நாள் மாலையே சபரிமலை ஐயப்பன் சன்னிதானத்தில் நடை திறக்கப்பட்டது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இருமுடி ஏந்தி பம்பை வழியாகவும், புல்மேடு, எரிமேலி வழியாகவும் சபரிமலை சென்று ஐயப்பனை தரிசனம் செய்கின்றனர். கடந்த ஆண்டு போல் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்காமல் தரிசனம் செய்து திரும்புகின்றனர்.
டிச 20, 2024