பீடி, சிகரெட் கேட்டு ரகளை; கோர்ட்டில் பரபரப்பு | salem police | accused vairal video | Salem court
சேலம் மல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் நரேஷ் குமார் வயது, 32. 2020ல் கொலை வழக்கு ஒன்றில் நரேஷ் குமாரை மல்லூர் போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு சேலம் மகளிர் கோட்டில் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் வழக்கு விசாரணைக்காக ஆயுதப்படை எஸ்ஐ ராமானுஜம் உட்பட 3 போலீசார் நரேஷ் குமாரை கோட்டுக்கு அழைத்து வந்தனர். அப்போது கோர்ட் வராண்டாவில் காத்திருந்த நரேஷ் போலீசாரிடம் பீடி, சிகரெட் மற்றும் சாப்பாடு கேட்டுள்ளார். பீடி, சிகரெட் தர முடியாது. சாப்பாடு சிறையில் தயாராக இருக்கிறது என போலீசார் கூறியுள்ளனர். தொடர்ந்து கேட்டும் போலீசார் தராததால் ஆத்திரமடைந்த நரேஷ் குமார், குரலை எழுப்பி பாதுகாப்புக்காக வந்த போலீசாரை மிரட்டினான்.