கூட்டணி கட்சி தொழிற்சங்கத்தால் திமுக அரசுக்கு நெருக்கடி | Samsung workers strike | CITU | Strike co
காஞ்சிபுரம், சுங்குவார்சத்திரத்தில் அமைந்துள்ளது எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிக்கும் சாம்சங் தொழிற்சாலை. 2,500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இவர்கள், 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்டம்பர் 9 முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் முக்கிய கோரிக்கையான சி.ஐ.டி.யு தொழிற்சங்கம் அமைக்க அனுமதிக்க வேண்டும் என்பதை ஆலை நிர்வாகம் ஏற்கவில்லை. எலக்ட்ரானிக் பொருள் உற்பத்தி தொழிற்சாலைகள் எதிலும் தொழிற்சங்கங்கள் இல்லை என கூறி அனுமதிக்க மறுக்கிறது. ஊழியர்கள் தரப்பில், 7 பேர் கமிட்டி அமைத்து அதன் மூலம் கோரிக்கைகளை சொன்னால் பரிசீலித்து நடவடிக்கை எடுப்போம். ஊழியர்கள் அல்லாத நபர்கள் பேச்சுக்கு வரக் கூடாது எனவும் நிர்வாகம் தெரிவித்து விட்டது.