/ தினமலர் டிவி
/ பொது
/ எஸ்ஐ மீது மானநஷ்ட வழக்கு தொடுக்க மணல் லாரி உரிமையாளர்கள் முடிவு! Sand Lorry Seized | SI Warned
எஸ்ஐ மீது மானநஷ்ட வழக்கு தொடுக்க மணல் லாரி உரிமையாளர்கள் முடிவு! Sand Lorry Seized | SI Warned
கேரள மாநிலம் சித்தூர் மாவட்டத்தில், 5 யூனிட் மணல் வாங்கிய பாலமுருகன் அதை லாரி மூலம் தமிழகம் கொண்டு வந்தார். மணல் வாங்கிய ஆவணங்கள், ஜிஎஸ்டி பில் என அனைத்தையும் முறையாக வைத்திருந்தார். கரூர் மாவட்டம் குளித்தலை பெரியார் மேம்பாலம் அருகே மணல் லாரியை போலீசார் பிடித்தனர். எஸ்ஐ சரவண கிரி மணல் லாரியை ஆய்வு செய்தார். லாரி டிரைவர் அனைத்து ஆவணங்களை காட்டிய பிறகும், எஸ்ஐ லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. அவர் லஞ்சம் தர மறுத்ததால், மணல் கடத்தி வந்ததாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
ஜூன் 21, 2025