உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மாநிலம் முழுதும் பிரசார பயணத்தை நடத்த முடிவு | Sanitation workers | Sanitation workers Protest | Che

மாநிலம் முழுதும் பிரசார பயணத்தை நடத்த முடிவு | Sanitation workers | Sanitation workers Protest | Che

பணி நிரந்தரம் மற்றும் தனியார் வசம் ஒப்படைக்கப்படுவதை எதிர்த்து துாய்மை பணியாளர்கள் போராடி வருகின்றனர். சென்னை ரிப்பன் மாளிகை போராட்டத்துக்கு பின் அவர்கள் எங்கு கூடினாலும் போலீசார் கைது செய்வது தொடர் கதையாகி வருகிறது. இந்த சூழலில் மாநிலம் முழுதும் உள்ள துாய்மை பணியாளர்களை ஒருங்கிணைத்து நீதி கேட்கும் பிரசார பயணத்தை முன்னெடுத்து உள்ளனர். உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் துாய்மை பணியாளர்கள் இதற்கு அனுமதி கோரி டிஜிபி அலுவலகத்தில் மனுவும் அளித்துள்ளனர். கோவையில் துவங்கி பிரசார பயணம் திருப்பூர், நாமக்கல், ஈரோடு, சேலம், நாகர்கோவில், திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி என பல ஊர்களுக்கு செல்ல உள்ளது. தெருமுனை கூட்டங்கள் நடத்தவும் முடிவு செய்துள்ளனர். இதற்காக வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு என மாவட்டங்களை பிரித்து தனித்தனியாக வாகனங்களும் ஏற்பாடு செய்துள்ளனர். இப்பிரசார பயணத்தை நடத்த விடாமல் போலீசார் முறியடித்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து துாய்மை பணியாளர்கள் கூறுகையில்: எங்கள் போராட்டத்தை போலீசார் துணையுடன் அரசு முடக்கி விடுகிறது. போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்து விட்டாக கூறி கோர்ட்டையும் ஏமாற்ற பார்க்கிறது. மாநிலம் முழுதும் பெரும் போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளோம். அதற்கான பிரசார பயணத்தை நடத்த விடாமல் போலீசார் மிரட்டல் விடுத்து வருகின்றனர். தடையை மீறி எங்கள் பயணமும், போராட்டமும் தொடர்கிறது என்றனர். #Sanitationworkers | #SanitationworkersProtest | #ChennaiCorporation | #DMK | #Chennaiprotest

செப் 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை