நிரம்பி வழிந்த குளம் சாலைகளில் வெள்ளம் | Sankara Narayanasamy Temple
தென்காசி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக, பிரசித்தி பெற்ற சங்கரநாராயண கோயிலுக்குள் வெள்ளம் புகுந்தது. பிரதான வாயில், பிரகாரத்தை சுற்றிலும் தண்ணீர் தேங்கி நிற்பதால் பக்தர்கள் அவதி அடைந்தனர். சங்கர நாராணசுவாமி கோயிலின் துணை கோயிலான கரிவலம்வந்த நல்லூர் பால்வண்ணநாத சுவாமி கோயிலிலும் மழை நீர் புகுந்தது. சங்கரன்கோவில் நகரை ஒட்டியுள்ள குளம் நிரம்பி உபநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது. சங்கரன்கோவில் - சுரண்டை சாலை வெள்ளத்தில் மூழ்கியதால் வாகன ஓட்டிகள் தடுமாறினர். இங்குள்ள வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதி அடைந்தனர்.
டிச 13, 2024