/ தினமலர் டிவி
/ பொது
/ ஒரே நாள் மழை: துண்டிக்கப்பட்ட இரு மாநில போக்குவரத்து | SathyamangalamFlood | Rain Erode
ஒரே நாள் மழை: துண்டிக்கப்பட்ட இரு மாநில போக்குவரத்து | SathyamangalamFlood | Rain Erode
ஈரோடு-மைசூர் ஹைவே துண்டிப்பு வெளுத்து வாங்கும் மழை வெள்ளம் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கனமழை கொட்டுகிறது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சத்தியமங்கலம் வழியாக மைசூர் செல்லும் ஹைவேயில் வெள்ளபெருக்கு ஏற்பட்டது. நான்கு வழி பாதையின் ஒரு பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தற்காலிகமாக ஒரு வழி சாலையாக மாற்றப்பட்டு போக்குவரத்து நடக்கிறது. இதே போல அங்குள்ள பவானிசாகர் அணையின் நீர்மட்டமும் 100 அடியை எட்டியுள்ளது. நீர் வரத்து வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் 1000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
அக் 19, 2025