/ தினமலர் டிவி
/ பொது
/ தமிழக அரசு அதிகாரிகள் சிக்கியது எப்படி? Scam in TN +2 Exam | 12 public exam scam | Neet Exam
தமிழக அரசு அதிகாரிகள் சிக்கியது எப்படி? Scam in TN +2 Exam | 12 public exam scam | Neet Exam
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடந்தது. தொடர்ந்து ஏப்ரல் 5ல் சிவகங்கை மாவட்டத்தில் நடந்த விடைத்தாள் திருத்தும் பணியின் போது, மதுரையில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய இரு மாணவர்களின் விடைத்தாள்களின் கையெழுத்துகள் ஒரே மாதிரியாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக நடந்த விசாரணையில், அவர்கள் மதுரை பழங்காநத்தம் பகுதியில் செயல்படும், ஒரு பிரபல பள்ளி மாணவர்கள் என்பது தெரியவந்தது. இருவரும் அடுத்தடுத்த பதிவெண் கொண்டவர்கள். இயற்பியல் உட்பட 3 பாடப்பிரிவுகளில் இருவரும் அதிக மதிப்பெண்கள் பெற்றதும், விடைத்தாள் திருத்தும் மையத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
ஜூலை 27, 2024