வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இதில் அந்த இளைஞர்களை குறை சொல்வதற்கு முன் இதற்கு மூல காரணம் பொறுப்பற்ற பெற்றோர் என்பதை கவனிக்க வேண்டும். தங்கள் பிள்ளைகள் பள்ளிக்கு சென்று வர பேருந்துக்கு கட்டணம் பெற்றோர்கள் கொடுத்து விடும் பொழுது மாணவர்கள் பேருந்தில் வராமல் ஓசியில் லிப்ட் கேட்டு வருவதன் மூலம் பெற்றோர் கொடுக்கும் காசை மிச்சம் பிடித்து அவர்கள் போதை வஸ்துக்களை வாங்குகிறார்களா? ஒழுங்காக பள்ளிக்கு சென்று வருகிறார்களா? என்று கவனிக்க பெற்றோர்களுக்கு நேரம் கிடைப்பதே இல்லை. அப்பாவுக்கு டாஸ்மாக்கே கதி. அம்மாவுக்கு டிவி யே கதி. ஒருநாளும் பிள்ளைகளின் நடவடிக்கை பற்றி பார்ப்பது இல்லை. பள்ளிக்குச் சென்று ஆசிரியர்களிடம் மாணவர்களின் நடவடிக்கை, படிப்பு பற்றி கேட்பதே இல்லை. வீட்டில் பிள்ளைகளிடம் மனம் விட்டு பேசுவதே இல்லை. அப்படி பேசினால் பிள்ளைகளின் நடவடிக்கை மாற்றங்களை அறிந்து கொள்ள முடியும். அதுனால முதலில் பெற்றோர்கள் திருத்தணும். கடைசியில் நாடு முழுவதும் சோமபானக் கடையை திறந்து வைத்துள்ள "அப்பா"வுக்கு வாழ்த்துக்கள். எப்படியாவது நாட்டை நாசமாக்கினால் சரி.