தேர்தலின்போது மட்டும் திமுகவுக்கு தமிழ் பற்று வரும்
தமிழ், தமிழர் உரிமை என பேச முதலமைச்சருக்கு என தகுதி இருக்கிறது. கருணாநிதிக்கு என்ன தகுதி இருக்கிறது. மக்களின் உரிமைகளை பறி கொடுத்தவர்கள் இவர்கள். பல ஆண்டுகளாக அதிகாரத்தில் இருந்து உள்ளனர். தமிழை ஆட்சி மொழியாக கொண்டு வருவதாக கூறி செய்து இருக்கிறார்களா. தமிழ் பாதுகாப்பு, தமிழ் நீட்ச்சி தமிழர் உரிமை பாதுகாப்பு, தமிழர் உரிமை மீட்பு என்பது எல்லாம் வெறும் வார்த்தை. எதை பாதுகாத்து வைத்து இருக்கிறீர்கள் நீங்கள். கல்வி, மருத்துவம் என எதை பாதுகாத்து உள்ளீர்கள். மீன் பிடிக்கும் உரிமையா ராமேஸ்வரத்தில் மீனவர்கள் போராடி கொண்டு இருக்கிறார்கள். தேர்தல் வரும்போது மட்டுமே திமுகவுக்கு தமிழ் மீது பற்று வந்து விடுகிறது என சீமான் கூறினார்.
மார் 03, 2025