ஈரோடு போலீஸ் தனிப்படை நீலாங்கரையில் முகாம் NTK seeman EVR issue Erode byelection speech erode pol
நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகார் குறித்து சென்னை வளசரவாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர். இந்த விவகாரத்தில் சீமான் மீதான புகாரை விசாரித்து 3 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய போலீசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளதால் விசாரணை வேகம் எடுத்துள்ளது. போலீஸ் விசாரணைக்கு ஆஜராக மாட்டேன்; எனக்கு நேரம் இருக்கும்போதுதான் வருவேன் என தொடர்ந்து கூறி வந்த சீமான், நேற்றிரவு வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் ஆஜரானார். சீமானிடம் விசாரணை நடத்திய போலீஸ் அதிகாரிகள் விஜயலட்சுமியுடன் எப்படி நட்பு ஏற்பட்டது? அவரை திருமணம் செய்தது உண்மையா, கருக்கலைப்பு செய்யப்பட்டதா? பண உதவி செய்தீர்களா? புகாரை திரும்ப பெறும்படி மிரட்டினீர்களா? என்பது உட்பட 50க்கு மேற்பட்ட கேள்விகளை கேட்டதாக கூறப்படுகிறது.