உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / போதை போலீஸ் சில்மிஷம்: பொங்கி எழுந்த கணவனால் பரபரப்பு sexual harassment couple caught policeman

போதை போலீஸ் சில்மிஷம்: பொங்கி எழுந்த கணவனால் பரபரப்பு sexual harassment couple caught policeman

சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த கணவன் மனைவி நேற்றிரவு 11 மணியளவில் இரு சக்கர வாகனத்தில் ஓட்டேரி செங்கை சிவம் மேம்பாலம் வழியாக சென்று கொண்டிருந்தனர். இவர்கள் வண்டிக்கு பின்னால் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அவர் தொடர்ச்சியாக, ஹார்ன் அடித்துள்ளார். ரோடு காலியாக கிடக்கும்போது எதற்காக ஹார்ன் அடிக்கிறார்கள் என மனைவி திரும்பி பார்த்துள்ளார். ஹார்ன் அடித்த நபர் பெண்ணை பார்த்து ப்ளையிங் கிஸ் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதை அவர் கணவனிடம் சொன்னார். இரு கொஞ்ச தூரத்தில் போலீஸ் ஸ்டேஷன் வருது அவனுக்கு நாம யாருனு காட்டலாம்? என சொல்லி கணவர் அமைதியாக வண்டியை ஓட்டினார். ஓட்டேரி போலீஸ் நிலையம் எதிரே வந்ததும், கணவன் மனைவி இருவரும் சேர்ந்து பைக் ஆசாமியை மறித்தனர். இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

மே 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி