கலவர கும்பலை கதறவிட்ட கிருஷ்ணர் பாணி செய்கை | Shahi Jama Masjid case | sambhal police station video
மசூதி கலவர கற்களை பொறுக்கி கட்டிய பெரிய போலீஸ் ஸ்டேஷன்! மகா பாரதம் பாணியில் நடந்த தரமான சம்பவம் உத்தரப்பிரதேசம் மாநிலம் சம்பலில் நடந்த மசூதி கலவரம் நாட்டையே உலுக்கியது. கலவரத்தின் போது போலீசாரை நோக்கி, கலவரக்காரர்கள் எறிந்த செங்கற்களை சேகரித்து இப்போது பிரமாண்ட போலீஸ் ஸ்டேஷனை உத்தரப்பிரதேசம் போலீசார் கட்டி இருப்பது அதிர வைத்துள்ளது. கலவரக்காரர்களுக்கு போலீஸ் கொடுத்த இந்த தரமான பதிலடி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அன்று மசூதி முன் அப்படி என்ன நடந்தது? கலவரக்காரர்களுக்கு போலீசார் கொடுத்த பதிலடி என்ன? புதிதாக கட்டிய பிரமாண்ட போலீஸ் ஸ்டேஷனில் பகவத் கீதை வாசகம் இடம் பெற்று இருப்பது ஏன்? மகாபாரதம் தேர் வந்தது எப்படி? என்பதை பார்க்கலாம். 2024 நவம்பர் 24ம் தேதி தான் நாட்டை உலுக்கிய அந்த கலவரம் வெடித்தது.