/ தினமலர் டிவி
/ பொது
/ சிறுவாபுரி முருகன் கோயில் இடத்தில் 30 ஆண்டு ஆக்கிரமிப்பு அகற்றம் | Siruvapuri Murugan temple | Templ
சிறுவாபுரி முருகன் கோயில் இடத்தில் 30 ஆண்டு ஆக்கிரமிப்பு அகற்றம் | Siruvapuri Murugan temple | Templ
சிறுவாபுரி பாலசுப்பிரமணியசுவாமி கோயில் அன்னதான மண்டபத்திற்கு அருகே 5 வீடுகள் கட்டப்பட்டு வசித்து வந்தனர். இந்த இடம் கோயிலுக்கு சொந்தமான இடம் என கூறப்படுகிறது. ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற அறநிலையத்துறை அறிவுறுத்தியது. வீட்டில் வசித்த நபர்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். சென்ற மாதம் 16ம் தேதி கோர்ட் தீர்ப்பு வழங்கியது. ஆக்கிரமிப்புகளை அகற்றிடுமாறு அறநிலையத்துறைக்கு சாதகமாக உத்தரவு வந்தது. இன்று ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என அறநிலையத்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடங்கியது.
ஆக 07, 2025