/ தினமலர் டிவி
/ பொது
/ குப்த கங்கையில் புனித நீராடிய 5,000 பக்தர்கள் |Sri Vanjinathar temple|Theerthavari |Thiruvarur
குப்த கங்கையில் புனித நீராடிய 5,000 பக்தர்கள் |Sri Vanjinathar temple|Theerthavari |Thiruvarur
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே அமைந்துள்ளது ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சிநாத சுவாமி திருக்கோயில். இந்தியாவிலேயே எமதர்மராஜனும், சித்திரகுப்தனும் தனி சன்னதியில் இருக்கும் இந்த கோயிலில், ஆயுள் விருத்தி வேண்டி நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். சிறப்புமிக்க இந்த கோயிலில் கார்த்திகை மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு தீர்த்தவாரி வெகு விமர்சையாக நடந்தது. சுப்பிரமணியர் வள்ளி தேவசேனா, விநாயகர், சண்டிகேஸ்வரர் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து வசந்த மண்டபத்தில் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
டிச 15, 2024