ஏளனம் பேசியவர்களின் வாய் அடைத்த திமுக எம்.பிக்கள் Stalin| CM| Tamilnadu|MPs
நவம்பர் 25ல் தொடங்கிய பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடர் நேற்றுடன் முடிந்தது. இதில் திமுக எம்.பி.க்கள் வீறுகொண்ட வீரர்களாக முழங்கியதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். நாட்டை உலுக்கும் பிரச்னைகளில் திமுக எம்.பி.க்கள் என்ன பேசுகின்றனர், திமுகவின் நிலைப்பாடு என்ன என்பதை நாடே உன்னிப்பாக கவனிக்கிறது. அந்த நிலைக்கு திராவிட பேரியக்கம் வளர்ந்திருப்பதை நினைத்து பெருமை கொள்கிறேன். குளிர்கால கூட்டத் தொடர் குறித்து பார்லிமென்ட் விவகாரங்கள் துறை ஒரு செய்தி வெளியிட்டது. லோக்சபா 54.5 சதவீதமும், ராஜ்ய சபா 40 சதவீதமும் ஆக்கப்பூர்வமுடன் செயல்பட்டதாக அதில் குறிப்பிட்டுள்ளது.
டிச 21, 2024