தெருநாய்கள் பிரச்னை: தமிழக அரசுக்கு ஐகோர்ட் யோசனை | Stray Dog | High court | Animal welfare
அவ்வளவு தைரியம்
யாருக்கு இருக்கிறது?
தெருநாய்கள் வழக்கில்
ஐகோர்ட் கேள்வி
சென்னையில் உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாமல், உரிமையாளர்களால் பொது இடத்தில் அழைத்து செல்லப்படும் நாய்கள் கடித்து மக்கள் பதிக்கப்பட்டதால், இதை முறைபடுத்துவது தொடர்பாக சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தெருநாய்கள் விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் ஐகோர்ட்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்ற உத்தர பிறப்பிப்பிக்கப்பட்டு இருப்பதாக அரசு தெரிவித்தது. இதை ஏற்ற நீதிபதிகள் இந்த வழக்கையும் சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்ற உத்தரவிட்டனர்.
நாய்கள் பிரச்னை மிக தீவிரமானது எனக்கூறிய நீதிபதிகள், ரேபிஸ் தாக்கிய நாய்கள் எங்கு பராமரிக்கப்படும் என்று கேட்டனர்.
பதில் அளித்த தமிழக அரசு, ரேபிஸ் தாக்கப்பட்ட நாய்களுக்கென தனியாக காப்பகங்கள் அமைக்கப்படும் என தெரிவித்தது. அப்படியானால், அந்த நாய்களுக்கு உணவளிக்க செல்ல யாருக்கு தைரியம் இருக்கிறது? என நீதிபதிகள் கேட்டனர்.
இதுபோன்ற நாய்களை கையாள வேறுவிதமான நடவடிக்கை எடுத்தால் மிருகவதை தடை சட்டத்தை சுட்டிக்காட்டி தொண்டு நிறுவனங்கள் வழக்கு தொடரும் என்பதையும் சுட்டிக்காட்டினார்.
வெளிநாடுகளில் தெருநாய்கள் பிரச்னை எப்படி கையாளப்படுகிறது? அதற்கு என்ன தீர்வு காணப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொண்டு அதை பின்பற்றலாம் என தமிழக அரசுக்கு ஐகோர்ட் நீதிபதிகள் யோசனை தெரிவித்தனர்.