/ தினமலர் டிவி
/ பொது
/ 3 மாதத்தில் 200 பேரை விரட்டி விரட்டி கடித்த நாய்கள் | Street Dog | Bit 200 Persons | Manaparai
3 மாதத்தில் 200 பேரை விரட்டி விரட்டி கடித்த நாய்கள் | Street Dog | Bit 200 Persons | Manaparai
திருச்சி, மணப்பாறை நகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் தெரு நாய்கள் அதிக அளவில் சுற்றுகின்றன. மக்கள் கூடும் இடங்கள், சாலைகளிலும் கூட்டம் கூட்டமாக அலைகின்றன. நாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. நகராட்சி அலுவலக பகுதியில் குடிகொண்டுள்ள 15க்கும் மேற்பட்ட நாய்கள், மஸ்தான் தெரு, காந்திநகர் பகுதிகளில் 20க்கும் மேற்பட்டோரை கடித்து காயப்படுத்தியுள்ளன. ஜனவரி முதல் இப்போது வரை 200க்கும் மேற்பட்டோர் நாய் கடியால் பாதித்துள்ளனர்.
மார் 19, 2025