உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / விரட்டி வரும் தெருநாய்கள்: மரண பயத்தில் மக்கள் | Poonamallee | Street dogs | tiruvallur kakkalur

விரட்டி வரும் தெருநாய்கள்: மரண பயத்தில் மக்கள் | Poonamallee | Street dogs | tiruvallur kakkalur

நடந்து சென்ற தாய்-மகளை மாறி மாறி கடித்த தெருநாய்கள் நெஞ்சை பதற வைக்கும் Video பூந்தவல்லி நகராட்சி 13வது வார்டு மகாலட்சுமி நகரில் தெருநாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. அதே பகுதியை சேர்ந்த யாஸ்மின் என்ற பெண், ஒன்பது வயது மகள் சமீராவை பள்ளியில் இருந்து வீட்டுக்கு கூட்டிச் சென்று கொண்டிருந்தார். மகாலட்சுமி நகர் 5வது தெருவில் நடந்து சென்றபோது 2 தெரு நாய்கள் மகளை கடித்தது. மகளை காப்பாற்ற தாய் யாஸ்மின் முயன்றார்.

அக் 28, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

வாசகன்
அக் 29, 2025 11:17

தெரு நாய்கள் ஏன் விலங்கு நல ஆர்வலர்களை கடிப்பதே இல்லையே. அவர்கள் குடும்பத்தினை கடித்து குதறும் வரை இந்த அவலம் தொடரும். முதலில் ஒதுக்குபுறமாக திறந்த வெளியில் இயற்கை உபாதையை சரியான சொல்லை நீக்கசொல்லுகிறது இந்த இணையதளம் கழித்த காலங்களில் இது போல் பிரச்சனை பெரிய அளவில் இல்லை. இப்போது அவற்றுக்கு பிடித்தமான உணவு சற்றே குறைய அழிந்து போனது. அதனால் அவை வீதியிலேயே சுற்றி வருகின்றன. அவற்றின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த பெரும் பட்ஜெட் மற்றும் பெரும் எண்ணிக்கையிலான மருத்துவர்கள் இடவசதி தேவைப்படுகிறது. வடகிழக்கு மாநிலத்தைபோல நாய்கறி உண்ணும் பழக்கமும் இல்லை. அவற்றை அவை வாழும் இடங்களிலிருந்து அப்புறப்படுத்தக்கூடாத என நீதிமன்றத்தில் உத்தரவு பெற்றுள்ளனர் விலங்கு நல ஆர்வலர்கள். ஆனால், வளர்ச்சி மற்றும் தொழில்மயமாதலுக்காக மனிதர்கள் அவர்களின் வாழிடங்களிலிருந்து அப்புறப்படுத்தும்போது யாருமே குரல் கொடுப்பதில்லை. வனவிலங்கு பாதுகாப்பு என பழங்குடியினர்கள் பிரச்சனையை சந்திக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் உடனடியாக நீதிமன்றத்திற்கு சென்று வாதாடி தீர்ப்பு பெற இப்படிபட்ட ஆர்வலர்கள் யாரும் இல்லை. இதெல்லாம் புரியாத புதிர்கவே உள்ளது.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி