மாணவனுக்கு ஸ்பூனில் பொங்கல் ஊட்டி மகிழ்ந்த ஸ்டாலின் tn breakfast scheme | mk stalin | bhagwant mann
பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை 2022 செப்டம்பரில் முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைத்தார். முதலில் உள்ளாட்சி பள்ளிகளில் துவங்கிய இந்த திட்டத்தை, 2023 ஆகஸ்ட்டில் அனைத்து அரசு துவக்க பள்ளிகளுக்கும் தமிழக அரசு விரிவுபடுத்தியது. பின்னர் கிராமப்புறங்களில் செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் கடந்த ஆண்டு ஜூலையில் காலை உணவு திட்டம் துவங்கப்பட்டது. நகர்ப்புறங்களில் செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இந்த திட்டம் கொண்டுவரப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது. அதன்படி அந்த திட்டம் இன்று துவங்கப்பட்டுள்ளது. மயிலாப்பூரில் உள்ள புனித சூசையப்பர் அரசு உதவி பெறும் பள்ளியில் இதற்கான துவக்க விழா நடந்தது. முதல்வர் ஸ்டாலின், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சேர்ந்து இந்த திட்டத்தை துவங்கி வைத்தனர். மாணவர்களுக்கு பொங்கல் பரிமாறப்பட்டது. அவர்களுடன் சேர்ந்து ஸ்டாலின், பகவந்த் மான் காலை உணவை சாப்பிட்டனர்.