ஆஸ்பிடலில் மா.சு ஆய்வின் போதே நடந்த சம்பவம்|Subramanian|DMK
நெல்லை, கூடங்குளத்தில் இருந்து ராதாபுரம் செல்லும் ரோட்டில் அரசு ஆஸ்பிடல் உள்ளது. சுகாதார அமைச்சர் சுப்பிரமணியன் இங்கு திடீரென ஆய்வு மேற்கொண்டார். முதலில் நோயாளிகளுக்கான டோக்கன் பதிவு செய்யும் அறைக்கு சென்றார். அப்போது கம்ப்யூட்டர் மூலம் டோக்கன் பதிவு செய்யவில்லையா? என கேட்டார். கம்ப்யூட்டர் ரிப்பேராக இருப்பதால் சீட்டு எடுக்க முடியவில்லை என அங்கிருந்த ஊழியர்கள் கூறினார். உடனடியாக அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினர்.
ஏப் 11, 2025