/ தினமலர் டிவி
/ பொது
/ துப்பாக்கியால் சுட முயன்றவரை பாய்ந்து பிடித்த ஆதரவாளர்கள் Sukhbir Singh Badal|Shiromani Akali Dal
துப்பாக்கியால் சுட முயன்றவரை பாய்ந்து பிடித்த ஆதரவாளர்கள் Sukhbir Singh Badal|Shiromani Akali Dal
பஞ்சாப் மாநிலத்தின் துணை முதல்வராக இருந்தவர் சுக்பீர் சிங் பாதல். இவரது ஆட்சியில் சீக்கிய மதத்திற்கு எதிராக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. சீக்கியர்களின் அதிகார பீடமான அகால் தக்த் அவருக்கு மத ரீதியிலான தண்டனை விதித்தது. தவறுக்கு வருந்துவாக எழுதப்பட்ட பதாகையை கழுத்தில் அணிந்து கொண்டு கையில் ஈட்டி ஏந்தியபடி, பொற்கோயிலில் சேவகராக பணியாற்றி வருகிறார். இன்றும் அவர் பொற்கோயில் வாசலில் சக்கர நாற்காலியில் உட்கார்ந்து இருந்தார். கோயிலுக்கு வந்தவர்களில் ஒருவர், திடீரென பாக்கெட்டில் இருந்து துப்பாக்கிய எடுத்து சுக்பீர் சிங்கை நோக்கி சுட முயன்றார்.
டிச 04, 2024