/ தினமலர் டிவி
/ பொது
/ முருகன் மீதான வழக்கு: ரத்து செய்தது சுப்ரீம் கோர்ட் Supreme Court| L Murugan BJP Murasoli Trust
முருகன் மீதான வழக்கு: ரத்து செய்தது சுப்ரீம் கோர்ட் Supreme Court| L Murugan BJP Murasoli Trust
மத்திய அமைச்சர் முருகனுக்கு எதிராக முரசொலி அறக்கட்டளை தொடர்ந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ளது. சென்னை கோடம்பாக்கத்தில் திமுகவின் முரசொலி நாளிதழ் அலுவலகம் அமைந்துள்ள நிலம் பஞ்சமி நிலம் என பாஜ நிர்வாகி சீனிவாசன் 2019-ம் ஆண்டில் தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையத்தில் புகார் செய்தார். 2020ல் பாஜ மாநில தலைவராக இருந்த எல்.முருகன், முரசொலி மீதான புகாரை சுட்டிக்காட்டி பேட்டியளித்திருந்தார். அதைத்தொடர்ந்து முருகன் மீது முரசொலி அறக்கட்டளை சார்பில் அதன் அறங்காவலர் ஆலந்தூர் பாரதி எழும்பூர் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
டிச 05, 2024