/ தினமலர் டிவி
/ பொது
/ இம்பாலில் 2வது நாளாக சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் விசிட் Supreme Court Judges at Imphal| NALSA visit
இம்பாலில் 2வது நாளாக சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் விசிட் Supreme Court Judges at Imphal| NALSA visit
மணிப்பூரில் கடந்த 2023ம் ஆண்டு இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல், மிகப் பெரிய கலவரமாக வெடித்தது. வீடுகள், பொதுச் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகினர். பலர் கொல்லப்பட்டனர். முதல்வர் பைரேன் சிங் பதவி விலகியதால் கடந்த மாதம் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்தது. துப்பாக்கி ஏந்திய போலீசார் மற்றும் துணை ராணுவப்படையினர், மாநிலம் முழுதும் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் முகாம்கள் அமைத்து, உணவு, உடை, மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மார் 23, 2025