போலீஸ் விசாரணை வளையத்தில் தமன்னா? | Tamannaah Bhatia | Cryptocurrency
இணைய வழியில் கிடைக்கும் டிஜிட்டல் வகை பணமான கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் கோடிக்கணக்கில் லாபம் கிடைக்கும். சீக்கிரம் பணக்காரராகி விடலாம் என்று சொல்லி புதுச்சேரியைச் சேர்ந்த 10 பேரிடம் 2 கோடியே 40 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்த மாஜி அரசு ஊழியர் அசோகன் என்பவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் நடத்தப்பட்ட விசாரணையில், சினிமா நடிகைகள் தமன்னா மற்றும் காஜல் அகர்வாலின் விளம்பரங்கள் மற்றும் நிகழ்ச்சிகளின் மூலம் ஆயிரக்கணக்கானோரிடம் பணத்தை திரட்டியுள்ளனர்.
மார் 01, 2025