தமிழகத்தில் ஊற்றப்போகுது கனமழை-முக்கிய அப்டேட் tamil nadu rain alert | imd chennai | tn heavy rain
தமிழகத்தில் வழக்கத்துக்கு மாறாக இந்த முறை முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை துவங்கியது. முதல் ஒரு வாரம் நல்ல மழை பெய்தது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. அதன் பிறகு ஒரு வாரமாக மழை இல்லை. அக்னி நட்சத்திரம் போல வெயில் சுட்டெரிக்கிறது. இந்த நிலையில் தான் மீண்டும் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை மையம். அதன் அறிக்கை: தென்னிந்திய பகுதிகள் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் 9ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். 10ம் தேதி முதல் மீண்டும் கனமழை துவங்கும். அன்றைய தினம் கடலூர், கள்ளக்குறிச்சி விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் கனமழை கொட்டித்தீர்க்கும். 11ம் தேதி தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். 12ம் தேதியை பொறுத்தவரை வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த நாட்களில் தமிழகத்தின் மற்ற இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.