உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தொல்லியல் துறை அகழாய்வு செய்ய கோரிக்கை | Tamili | Sivaganga | Potsherd | Tamili Potsherd

தொல்லியல் துறை அகழாய்வு செய்ய கோரிக்கை | Tamili | Sivaganga | Potsherd | Tamili Potsherd

சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவனர் காளிராசா, தலைமையில் 10 பேர் அடங்கிய குழுவினர் காளையார் கோயில் பாண்டியன் கோட்டைப்பகுதியில் கள ஆய்வில் ஈடுபட்டனர். ஞாயிறன்று தமிழி எழுத்து பொறித்த பானை ஓடு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. 2000 ஆண்டுகள் பழமையான தமிழி எழுத்து கொண்ட இந்த பானை ஓட்டில் ன் கூட்டம் என எழுதப்பட்டு உள்ளது. இதை ன் கூட்டம் அல்லது ன் ஊட்டம் என வாசிக்கலாம். பொதுவாக பானைகளில் இடமிருந்து வலமாக எழுத்துகள் எழுதப்படுவது வழக்கம் ஆனால் இதில் மேலிருந்து கீழாக எழுதப்பட்டு உள்ளது. தமிழி எழுத்து பொறித்த பானை ஓடு சிவகங்கை அரசு அருங்காட்சியத்தில் ஒப்படைக்கப்பட்டது.

ஜூலை 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ