பணத்திற்கு பதிலாக போன் கேட்கும் மின் ஊழியர்கள்
ஊழியர்கள் மொபைல் போன் வாங்க 10,000 ரூபாய் வழங்கும் மின்வாரியம்! தமிழகத்தில் மின் வாரிய ஊழியர்கள் இரு மாதங்களுக்கு ஒரு முறை வீடுகளுக்கு நேரில் சென்று மீட்டரில் பதிவாகியுள்ள மின் பயன்பாட்டை கணக்கு எடுக்கின்றனர். இதற்காக கணக்கெடுப்பு செயலி ஊழியர்களின் மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து தரப்பட்டுள்ளது. ஒரு ஆப்டிகல் பைபர் கேபிளும் வழங்கப்பட்டுள்ளது. இதை மீட்டர் மற்றும் மொபைல் போனுடன் இணைத்து செயலியை இயக்கியதும் மீட்டரில் பதிவாகியுள்ள மின் பயன்பாட்டு விபரம் செயலியில் பதிவேற்றப்படும்.
மார் 24, 2025