சரக்கு லோடு மாறியதா? டாஸ்மாக்கில் திடீர் பரபரப்பு | TASMAC | Salem
சேலம் ஆத்தூர் ரயிலடி தெருவில் டாஸ்மாக் கடை செயல்படுகிறது. டாஸ்மாக் சுற்றி பள்ளிகள், ஆஸ்பிடல்கள், ரயில் நிலையம் இருப்பதால் மக்கள் சிரமப்பட்டனர். குடி மகன்களின் அட்டகாசம் தாங்க முடியாமல் அவதியடைந்தனர். டாஸ்மாக் கடையை அகற்ற சொல்லி கோரிக்கை வைத்துள்ளனர். இந்த நிலையில் நேற்று டாஸ்மாக்கில் இருந்து பயணிகள் ஆட்டோவில் மது பாட்டில் பெட்டிகள் ஏற்றப்பட்டது. தனியார் பாருக்கு கொண்டு செல்லப்படுவதை அறிந்த மக்கள் ஆட்டோவை சிறைபிடித்தனர். டாஸ்மாக் சூப்ரவைசர் ரத்தினத்திடம் வாக்குவாதம் செய்தனர்.
ஆக 29, 2024