டாஸ்மாக் ஊழலில் அமலாக்கத்துறை அதிர்ச்சி | tasmac case | tn ed raid | ed tasmac case | akash baskaran
தமிழக அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் நிறுவனத்தில் 1,000 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து, சென்னை, விழுப்புரம் உட்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில் மார்ச் மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். டாஸ்மாக் நிர்வாக இயக்குனர், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் ரித்தீஷ் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் மே மாதம் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை ஐகோர்ட், ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் இருந்து பறிமுதல் செய்த ஆவணங்களை அவரிடம் திருப்பி ஒப்படைக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டது. அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் தடை விதித்தது. #TASMACCcase #TNEDRaid #TNEDCase #AkashBaskaranEDCase #TASMACIissue #TamilNaduED #EDRaid #CorruptionInvestigation #JusticeForTamilNadu #EDEnforcement #AllegationsAgainstED #TASMACInvestigation #EDUpdates #TamilNaduNews #CriminalInvestigations #Accountability #FinancialFraud #EDAction #TamilNaduPolitics