/ தினமலர் டிவி
/ பொது
/ ஆசிரியர்களுக்கு மலர்கள் தூவி வாழ்த்திய மாணவர்கள்! Teachers Day | Trichy | Celebrations
ஆசிரியர்களுக்கு மலர்கள் தூவி வாழ்த்திய மாணவர்கள்! Teachers Day | Trichy | Celebrations
லேசா குனிஞ்சிக்கோ, கைகளை குவிச்சுக்கோ, ரெடி ஒன், டூ, த்ரி என வழிகாட்டி ஆசிரியர் ஒருவர் கட்டளைகளை சொல்ல, வட்ட வடிவில் நின்றிருந்த மாணவர்கள் நாற்காலியில் உட்கார்ந்திருந்த ஆசிரியர்களுக்கு மலர்கள் தூவி ஆசிரியர் தின வாழ்த்துகளை தெரிவித்தனர். பிரத் ஆசிரியர் தினமான இன்று, திருச்சி மேல கல்கண்டார் கோட்டை அரசு உயர் நிலை பள்ளியில் மனதை நெகிழ வைத்த இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. ஏணி போல் இருந்து மாணவர்களை ஏற்றம் பெற செய்யும் ஆசிரியர்கள், வாழ்த்து தெரிவித்த மாணவர்களுக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்தனர்.
செப் 05, 2024