/ தினமலர் டிவி
/ பொது
/ கோயில் சொத்துகளில் கனிம வளம் கொள்ளை? ஐகோர்ட்டில் பகீர் | Temple Properties | Salem
கோயில் சொத்துகளில் கனிம வளம் கொள்ளை? ஐகோர்ட்டில் பகீர் | Temple Properties | Salem
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பிரசித்தி பெற்ற கண்ணனூர் மாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு கர்நாடகம், ஆந்திரா மற்றும் கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இப்படிப்பட்ட பெருமை மிகுந்த கோயிலுக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளது. இது குறித்து சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களின் கையில் சிக்கியுள்ளது. அதை மீட்க அறநிலையத் துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பிப் 24, 2026